Saturday 1 November 2014

தேர்வுகள்


தேர்வுகள் தொடங்கிவிட்டன.
பணிகளிலேயே கடினமானதாக நான் உணர்வது தேர்வறைக்கண்காணிப்பாளர் பணியையே.
காலையும் மாலையும் மூன்று மணிநேரம்.
தேர்வறையில் உட்காரும் பழக்கமும் எனக்கு இல்லை.
அதிகம் கேள்வி கேட்பவன் என்பதால் எனக்குப்பணியும் அதிகமாக இருக்கும். பணியில் என்றும் சோம்பேறித்தனம் காட்டியதில்லை. எனினும் மனம் சற்றே வெறுப்படையும்.
அதை மாணவரிடம் காட்டிக்கொள்ள மாட்டேன்.
மாணவர்களில் பலரும் எழுத்துச்சோம்பேறிகளாக உள்ளனர்.
கொஞ்ச நேரமே எழுதிவிட்டு சும்மாவே இருக்கின்றனர். வேடிக்கை அல்லது தூக்கம்.
எதையாவது எழுது என்று சொன்னாலும் கேட்பதில்லை.
எழுத சோம்பேறித்தனப்படுவதாலேயே எழுத்துப்பிழைகள் அதிகமாக வருகின்றன.
பாடத்திட்டம், பயிற்று முறைகள் ஆகியன மாற்றம் கண்டு வருவதுபோல் தேர்வுமுறையும் மாறினால் என்ன?
எப்படி?

No comments:

Post a Comment