Tuesday 6 May 2014

வாசிப்பு-வேள்வி 
பாடப்புத்தகத்தின் படங்களை மட்டும் நடத்திவிட்டு(?), படி என்று அமர்ந்து விடுவதல்ல மொழிப்பாட ஆசிரியரின் வேலை.
என்ன செய்யலாம்?
வாசிக்கவும் எழுதவும் தெரியாதவர்களாகவே சிலர் இருக்கின்றனர். பட்டப்படிப்பு முடித்தவர்களால் கூட சொந்தமாக எழுதுவது இயலாததாகவே இருக்கிறது..

முப்பருவக் கல்வியில் பல செயல்பாடுகளை ஆர்வமுடன் செய்திருந்தாலும் 9 ஆம் வகுப்பில், மூன்றாம் பருவம் முழுவதையும் வாசிப்பு,எழுதுவதற்காக ஒதுக்கினேன்.





தமிழ் பாடப்புத்தகம் மூடிவைக்கப்பட்டது.மாணவர்கள் அத்திகபட்சம் பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர், நன்கு வாசிக்க எழுதத் தெரிந்தவர் தலைவர்.
வாசிக்க எழுதத் தடையாக இருப்பவற்றை எவ்வாறு நீக்கலாம்? என்பன பற்றி விவாதிக்கப்பட்டது.

முதலில் அனைவரும் கதைப்புத்தகங்களை வாசிக்கவேண்டும், எண்ணத்தில் எழுவதை,அன்றாட நிகழ்வுகளை எழுதவண்டும். என முடிவு.

மதுரை 'புத்தகத்தூதன்' மூலம் ஓர் புத்தகக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.மாணவர்கள் விரும்பிய புத்தகங்களை வாங்கினர்.



பாடவேளையின்போது மாணவர்கள் குழுக்களாக அமர்ந்து வாசிக்கவும் எழுதவும் தொடங்கினர்.
இரு மாதங்கள் முடிந்துவிட்டது.
42 மாணவர்களில் தாமாக செலவுசெய்து இது வரை புத்தகம் வாங்காதவர்கள் 8 பேர் மட்டுமே.

கிடைக்கும் பணத்தைச் சேர்த்துவைத்து வாங்கும் பழக்கம் பலருக்கும் வந்திருக்கிறது. புத்தகக் கடைகளுக்குச் சென்று கழிவும் கேட்டுப்பெறுகின்றனர்.

அன்றாட நிகழ்வுகளை எழுதுகின்றனர்.
வாசித்தவற்றை விவாதிக்கின்றனர்.விமர்சனமும் எழுதுகின்றனர்.

இப்போது மாணவர்கள் வாசித்த, வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகங்கள் சில...
எஸ்.ரா வின் சிறுவர் நூல் வரிசை,சத்யஜித்ரே நூல் வரிசை,பத்தாயிரம் மைல் பயணம், போர்த்தொழில் பழகு, பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம், che வாழ்க்கை வரலாறு,பெரியார் களஞ்சியம்,மகாபாரதம்,ஹிட்லரின் வாழ்க்கை, 'ஆயிஷா' நடராஜனின் நூல்கள்.....

No comments:

Post a Comment