Tuesday 4 November 2014

எது சரியான கல்வி?


முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. 
கல்வி குறித்த சிந்தனைகளோடு இறையன்பு இ.ஆ.ப.
எழுதியுள்ள சிறு நூல்.
சரியான பாதையில் கற்கிறோமா? என்று மாணவர்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள இந்நூல் உதவியாக இருக்கும்.
ஆசிரியர்களுக்கும் கல்வி குறித்த விவாதங்களை மாணவரிடையே எழுப்ப இந்நூல் அறிமுகமாக இருக்கும்.
மனப்பாடத்தையும் மதிப்பெண்ணையும் விட்டுவிட்டு வாழ்க்கையோடு கல்வியை எப்படித்தொடர்பு படுத்தலாம்?
படைப்பாற்றலை வளர்த்தலே கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும். என்று பல்வேறு கோணங்களில் சிந்தனையைத்தூண்டும் பெரிய கருத்துக்களடங்கிய சிறு நூல்.

நூலிலிருந்து,

சரியான விடைகள், சரியான வினாக்களிலிருந்தே விடுபடத்தொடங்குகின்றன.
சாதாரண நிகழ்வுகளை கல்வியோடும், படிக்கிற பாடங்களை வாழ்க்கையோடும் தொடர்புபடுத்திப்பார்க்கிறபோது நாம் விசாரணையை ஆரம்பிக்கிறோம்.
படைப்பாக்கத்திறன் உள்ளவர்கள் எந்தப்பாடத்தையும் அதற்கான காரணங்கள், விளைவுகள் குறித்த விவரங்களுடன் தீவிர மனப்பான்மையுடன் அணுகுவார்கள்.


No comments:

Post a Comment