Saturday 1 November 2014

அரசுப்பள்ளி

ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் ஏன் சேர்க்கவில்லை? என்ற வினா எழுப்பப்படும்போதெல்லாம் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்று நடுநிலையோடு விவாதம் செய்யாமல் ஏன் கோபப்படுகிறோம்?
அரசு மருத்துவர், தனது பிள்ளைகளை எங்கு காட்டுகிறார்?
ரேஷன் கடை, இன்ன பிற அரசுத்துறைகளை உதாரணம் காட்டுவதே ஒருவகையில் நம் அறியாமையைக்காட்டுகிறது.
அரசு மருத்துவர் தனியார் மருத்துவமனையை நாடக்காரணம்,
அரசு மருத்துவமனையில் தரம் இல்லை.
அதேபோல் அரசுப்பள்ளியில் தரம் இல்லை என நாம் ஒத்துக்கொள்ளத்தயாரா?
இரு மருத்துவமனைகளிலும் மருத்துவம் செய்வதென்னவோ ஒரே மருத்துவர்தான் என்பதும் முரண்.
சரி. நுகர்பொருளோடு கல்வியை ஒப்பிட முடியுமா?
கல்வி, அறிவு சார்ந்தது.
பிற துறையினரின் தவறுகள் சிறு பாதிப்பையே தரும்.
ஆசிரியரின் தவறுகள்,
வருங்காலத்தலைமுறையையே பாதிக்கும்.
ஆசிரியர் பற்றாக்குறை, கட்டமைப்பு, இடமாறுதல், பயிற்றுமுறை குழறுபடிகள் என்று சொல்லப்படும் காரணங்கள் ஆர்வமிக்க ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் சரிசெய்ய இயலும்.

No comments:

Post a Comment