Monday 3 November 2014

ஆசிரியர் நவராத்திரி - 7 - பெருமிதம்.


என தந்தையார் சொல்லுவார்,
" இந்த வருஷமாவது நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பம் குடுடா!"
அவருக்கு என்னவோ அந்த விருதின்மேல்
அவ்வளவு ஆசை.( அவர் ஆசிரியரல்ல).
நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் அதிக கேலிக்குரியதாகவே மாறி வருகிறது.
நியாயமாக சிலருக்குக்கிடைத்தாலும் " நான் நேர்மையாக வாங்கினேன்" மற்றவர் போல் 'வாங்கவில்லை' என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.
எங்கேனும் நமது மாணவர்கள் நம்மிடமோ பிறரிடமோ,
" என் ஆசிரியரால் நான் நன்றாக இருக்கிறேன்"
என்று சொல்லக்கேட்கும்போது நினைத்தாலும் மறைக்கமுடியாதபடி
ஆசிரியரின் முகத்தில் தோன்றும் பெருமிதமே,
அவர் வாழ்நாளில் பெரும் உயரிய விருது.

இன்றைய நிலையில் ஆசிரியர்கள் பல்வேறு விமர்சனங்களை எதிர்நோக்கிச்செயல்பட வேண்டியுள்ளது.
எல்லாவிதமான உணர்வுகளின் எதிர்மறையான தாக்குதல்களிலிருந்து ஆசிரியரைக்காக்கும் ஒரே மெய்ப்பாடு ' பெருமிதம்'.
ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
நான் ஆசிரியர்.
நாளைய தலைமுறை என் கையில்.
நானே,
வருங்காலத்தலைமுறையை வடிக்கும் சிற்பி.

No comments:

Post a Comment