Saturday 1 November 2014

கவிவாக்கு


11ஆம் தேதி நள்ளிரவிற்குப்பின்பே மகாகவி புகழுடல் எய்தினான். எனவே 12 ஆம் தேதியே அவனது நினைவு நாளாகக்கொண்டாடப்படவேண்டும் என்றாலும் இன்றையதினத்தையே காலம் காலமாக கொண்டாடிப்பழகிவிட்டோம்.
நாளில் என்ன இருக்கிறது?
பாரதியை நினைத்தாலே போதும்.
'படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் ஐயோவென்று போவான்'
பாரதியின் வரிகளிலேயே இவை மட்டுமே அதீத கோபத்துடன் வெளிப்பட்ட வரிகள் என்று நம்புகிறேன்.
இவ்வளவு வெறுப்பை அவன் எங்குமே உமிழ்ந்ததில்லை.வெள்ளையர் மீது கூட இப்படி ஒரு சாபமிட்டதாகத்தெரியவில்லை.
படித்தவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
கவிவாக்கு பொய்க்காது.

No comments:

Post a Comment