Monday 3 November 2014

நவரச நாயகன் / நாயகி.

05.10.2014

இன்று உலக ஆசிரியர் தினம்.
வாழ்த்துக்கள்.
வகுப்பறை.
ஆசிரியர். எதிரே மாணவர்கள்.
மாணவர்கள் ஒவ்வொருவராக வாசிக்கிறார்கள்.
ஆசிரியர் அவ்வப்போது விளக்கம் சொல்கிறார்.
வாசிக்கும்போது புத்தகத்தையும்,பேசும்போது ஆசிரியரையும் மாணவர்கள் பார்க்கிறார்கள்.
# இரவு நேரம் தூக்கம் வரவில்லை என்றால் ஏதேனும் புத்தகத்தை வாசியுங்கள். விரைவில் தூக்கம் வந்துவிடும்.
# நமக்கு செய்தி பிடிக்கும் என்றாலும் விளக்கப்படங்கள் இல்லாமல் 45 நிமிடங்கள் வெறுமனே செய்தி வாசிப்பவர் மட்டுமே வாசித்துக்கொண்டிருந்தால் பொறுமையாகக்கேட்க முடியுமா?
பெரும்பாலும் வகுப்பறைகள் மட்டும் ஏன் இப்படி நடைபெற வேண்டும்?
ஆசிரியர் மாணவர்கள் அனைவரையும் பார்த்துக்கொண்டே பேசலாம். மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் ஒருவரையே பார்க்கிறார்கள். கவனிக்க முயல்கிறார்கள்.
அவர்களின் கவனம் நம்மீது நிலைக்க என்ன செய்யலாம்?
ஆசிரியர் நவரச நாயகன் / நாயகி ஆக வேண்டும்.
சொல்லும் செய்திக்கேற்ற முகபாவங்களை வெளிப்படுத்தவேண்டும்.
குரலில் ஏற்ற இறக்கங்கள், உணர்ச்சி வேண்டும்.
ஒரே இடத்தில் நிற்காமல் வகுப்பறை முழுதும் இயங்கவேண்டும்.
ஆசிரியர் சிறந்த நடிகராக இருக்க முயலவேண்டும்.
மாணவர்கள் அமரும் முறையை மாற்றியமைக்கவும் முயற்சிக்கலாம்.
அவ்வப்போது வகுப்பைவிட்டு வெளியே மாணவர்களை அழைத்துச்சென்று வட்டமாக அமரவைத்து பாடம் நடத்தலாம்.
வகுப்பறை என்னும் நாடக மேடையில் நாமும் மாணவர்களும் நடிகர்களே.
நாமே செயல்பட்டுக்கொண்டிராமல் மாணவர்களையும் ஈடுபடவைப்பதிலேயே கற்றல் கற்பித்தல் நிகழ்கிறது.

No comments:

Post a Comment