Saturday 1 November 2014

ஆசிரியர் நவராத்திரி - 5 - அச்சம்.


'வாத்தியார்ன்னு சொன்னாலே வயித்துல புளியக்கரைக்கும்'
போன தலைமுறை மாணவர்கள்.
'வகுப்புக்குள்ள போறதே, காட்டுக்குள்ள போறமாதிரி'
இன்றைய ஆசிரியர்கள்.
மொத்தத்தில் ' பள்ளி ' அச்சத்தின் உறைவிடம்.

மாணவர்களுக்கு கல்வி மேல் ஏற்படும் அச்சம், ஆசிரியரின் மேலுள்ள அச்சம் போலத்தோன்றுகிறது.
அதிகாரிகள், விளக்கப்படாத கல்விமுறைகள், விவாதிக்கும் ஊடகங்கள்,கேலி பேசும் பொதுமக்கள், பணிச்சுமை, புரிந்துகொள்ள இயலாத மாணவர்கள், என்று பலமுனைத்தாக்குதலில்
பகிர்தலுக்கு வழியின்றி மன அழுத்தத்தில் ஆசிரியர்கள்.
பயம்..அச்சம்.
அச்சம், கண்களை மூடிக்கொள்ளச்செய்யும்.
அச்சம் தவிர்த்து விழி திறந்தால் வழி கிடைக்கும்.
ஆசிரியர்கள் தன்னையும் உணர்ந்துகொண்டு புதிய தலைமுறையை உருவாக்கும் உன்னத பணியில் இருப்பவர்கள்.
பள்ளி எனும் வயலில் முக்கிய களை- அச்சம்.
அச்சம் தவிர்.

No comments:

Post a Comment