Monday 3 November 2014


பயிற்சியாசிரியைகள் இருவருமே ' ஆயிஷா' வாசித்துவிட்டனர்.
நல்லா இருக்கு, சார்.
இன்னும் கொஞ்சப்பேர் வாசிக்கிறாங்க.
' ஆயிஷா' நல்ல தொடக்கம் தரும்.
கல்விகுறித்து மேலும் வாசிக்க ஆர்வத்தைத்தூண்டும். என்றேன்.
தொடர்ந்து சில புத்தகங்கள் தருவேன்.
இருவருமே வாசித்துவிட்டு திருப்பித்தந்துவிட வேண்டும்.
வாசிக்க வாசிக்க, புதுப்புத்தகங்கள் தருவேன். என்றேன்.
மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர்.
இரா.நடராசன், பேரா.மாடசாமி, ஜான் ஹோல்ட், என்று பல்வேறு அற்புத ஆளுமைகளின் புத்தகங்கள்,மற்றும் பல்வேறு புத்தகங்கள் இருக்கின்றன.
எதைக்கொடுக்கலாம்?
எல்லாமே அற்புதமானவை.
டோட்டோ சான், கனவு ஆசிரியர் - இரு நூல்களையும் கொடுத்தேன்.
சனி,ஞாயிறு இரு நாட்களில் வாசித்துவிடலாம்.
அவசரமில்லாமல் ரசித்துப்படியுங்கள்.
எடுத்துச்சென்றிருக்கிறார்கள்.

ஆயிஷா- நூலை வாசிக்கக்கொடுத்தேன்.என்ற முந்தைய பதிவைக்கண்ட நண்பர்களில் சிலர் எங்கு கிடைக்கும்?எனக்கும் வேண்டும்! என்று ஆர்வமுடன் கேட்டிருந்தனர்.
ஆசிரியர்,பள்ளி, கல்விமுறைகள் குறித்து வாசிக்கச்சுவையான நூல்கள் பல உள்ளன.
புத்தகக்கடைகளில் இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் நகரங்களுக்கு செல்லும்போது வாங்கிக்கொள்ளலாம்.

டோட்டோ சான்
ஜப்பானின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர்.
தனது குழந்தைப்பருவத்தில் படித்த 'டோமோயி'பள்ளியைப்பற்றிய நினைவுத்தொகுப்பே டோட்டோ சான்- அவரின் செல்லப்பெயர்.
டோட்டோ சான், பல்வேறு பள்ளிகளில் இருந்து நீக்கப்படுகிறாள். சேட்டைக்காரி என்று அவளை ஏற்க எந்தப்பள்ளியும் முன்வரவில்லை.
'டோமோயி' பள்ளி அவளை ஈர்க்கிறது.மகிழ்வுடன் பள்ளி செல்கிறாள்.
பழைய ரயில் பெட்டிகளே வகுப்பறைகள்.செயல்முறைகள் மிக்க பாடங்கள்.
தன வாழ்வில் பள்ளி ஏற்படுத்திய மாற்றங்களை டோட்டோசான் அற்புதமாக எழுதியிருக்கிறார்.
குறுகிய காலமே இயங்கிய அப்பள்ளியில் பயின்ற பலரும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.
இந்நூலை நேஷனல் புக் டிரஸ்ட் - வெளியிட்டிருக்கிறது.


கனவு ஆசிரியர்.
பல்வேறு துறைகளில் புகழ்பெற்றவர்கள், தங்களது பள்ளிக்காலம் , கல்வி குறித்த சிந்தனைகள் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு
கனவு ஆசிரியர்.
வாசிக்க வாசிக்க, நாம் ஆசிரியர் என்பதில் பெருமிதமும் இன்னும் அதிகம் செயல்படவேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படும்.
க.துளசிதாசன் தொகுப்பாசிரியர்.
பாரதி புத்தகாலயம் வெளியீடு.

No comments:

Post a Comment