Saturday 1 November 2014

ஆசிரியர் நவராத்திரி - 2- அழுகை.


இரண்டாம் நாளான இன்று ஆசிரியருக்கு அலங்காரம், அழுகை.
ஒன்பது சுவைகள்- ரசங்கள்- ஆசிரியரின் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்று எழுதத்தொடங்கினேன்.
இரண்டாவது சுவையே அழுகை.
ஆசிரியருக்கு அழுகை எவ்வாறு முக்கியமாகும்?
யார்தான் அழுகையை விரும்புவார்?
கதையே இல்லாவிட்டாலும் நகைச்சுவைத்தோரணங்களால் ஆன திரைப்படங்கள் ஓடிவிடுகின்றன.
அழுகை அதிகம் என்று நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வசூலில் தோல்வியடைந்து விருதுகளை மட்டுமே பெறுகின்றன.
ஆனால், வீடுகள் தோறும் தொலைக்காட்சித்தொடர்கள் பெரும்பாலும் சோகம் பிழிகின்றன.
வாழ்வில் மகிழ்ந்த தருணங்களை விட சோகமான நிகழ்வுகளே மனதைவிட்டு அகலாமல் தங்கிவிடுகின்றன.
சில வேளைகளில், கருத்துக்களைச்சொல்லும்போது இடையே சிறிது சோகம், அழுகை கலக்கும்போது மாணவரின் மனதில் நன்கு பதியும்.
வெறுமனே செய்தியாகவோ, உணர்வுக்கலப்பின்றி தட்டையாகவோ சொல்லாமல் உணர்வின் உன்னத வெளிப்பாடாக அமையும்போது
வாழ்நாள் முழுதும் மாணவர் மனதில் நீங்காமல் நிலைக்கும்.

பகத்சிங் நாட்டுக்காக செய்த தியாகத்தை சொல்லும்போதே வீரமும் அழுகையும் மாறிமாறி சொற்களில் கலந்து உணர்வுப்பூர்வமாக வெளிப்படும்போது நாட்டின் விடுதலைக்கு முன்னோர் செய்த தியாகங்கள் பசுமரத்தாணியாகும்.
இதுவே இன்றைய அத்தியாவசியத்தேவை.

No comments:

Post a Comment