Monday 3 November 2014

அறிவுரை.


கேட்க, யாருக்கும்பிடிக்கது.
சொல்ல, எல்லோருக்கும் பிடிக்கும்.
அறிவுரை சொல்லும்போது, அது நம்மை ஒரு படி மேலே வைக்கிறது.
நம் கர்வம் - முனைப்பு, திருப்தியடைந்துகொள்கிறது.
நான் உயர்ந்தவன்.
அதிலும் ஆசிரியர்களாகிய நாம் அறிவுரை சொல்வதில் அப்பாக்களை மிஞ்சிவிடுவோம்.
வகுப்பறையும் மாணவர்களும் கிடைத்துவிட்டால் நம்மில் பலருக்கு மகிழ்ச்சி பொங்கும்.
நாம் சொன்னவுடன் அவர்கள் மாறிவிடவேண்டும்,
என்றும் எதிர்பார்ப்போம். நம்புவோம்.
நாம் மாறுவோமா? முடியுமா? ஒரே அறிவுரையில்!
சொல்வதைவிட செயல்,
சொற்களைக்கடந்த உரையாடல் மாணவர்களுடன் சாத்தியமாகும்போது மாற்றங்கள் சாத்தியமாகும்.
அறிவுரை சொல்லுதல்-
என்பதே ஒரு போதைதானே!
நானும் முகநூலில் எழுதுவதை அறிவுரை என நினைத்துக்கொள்ள மாட்டேன்.
எண்ணங்களின் பகிர்வு. அவ்வளவுதான்.

No comments:

Post a Comment