Monday 3 November 2014

கடிதம்


ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேரு மகளுக்கு எழுதிய கடிதம் குறித்த பாடம்.
கடிதம் எழுதுவதிலிருந்து பாடத்தைத்தொடங்கலாம் என்று எண்ணினேன். ஒவ்வோராண்டும் புதிய மாணவர்களை வீட்டிற்கு கடிதம் எழுத வைப்பது வழக்கம்.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் கடிதம் எழுதி அனுப்பும் பழக்கம் இல்லாமலே ஆகிவிட்டது.

கடிதம் குறித்த பல்வேறு சுவையான செய்திகளைச்சொன்னேன்.
நீங்கள் யாருக்காவது கடிதம் எழுதி அனுப்பியதுண்டா? என்று கேட்டேன்.
யாரும் இதுவரை அனுப்பியதில்லை என்றனர்.
என்னிடம் இருந்த அஞ்சலட்டைகளை ஆளுக்கொன்று கொடுத்தேன்.
அவரவர் வீட்டு முகவரியை எழுதச்சொன்னேன்.


அப்பாவுக்குக்கடிதம்.
வேண்டியதை எழுதிக்கொள்ளலாம்.
ஆர்வமுடன் எழுதினார்கள்.
அனைவரின் கடிதங்களும் அஞ்சல் பெட்டியில் போடப்பட்டன.
ஓரிரு நாட்களில் வீடுகளுக்குச்செல்லும் கடிதங்களால் பெற்றோர் மகிழ்வர்.
சில கடிதங்கள் முகவரி தெரியாமல் பள்ளிக்கே திரும்புவதும் உண்டு.

No comments:

Post a Comment