Saturday 1 November 2014

ஆசிரியர் நவராத்திரி - 3 - இளிவரல்.


மூன்றாம் சுவை இளிவரல்- இழிப்பு.
மதிய உணவு இடைவேளைகளில் எனக்கு மைதானத்தில் மாணவர்களை கவனிக்கும் பொறுப்பு.
சுற்றிக்கொண்டே இருப்பேன்.
மாணவர்கள் சாப்பிடும்போது
ஆசிரியரைப்பார்த்தால் அன்போடு கேட்பார்கள்,
சாப்பிடுங்க,
பெரும்பாலும் பழையசோறு அல்லது மோரும் ஊறுகாயும்.பலவகையான உணவுகளும் இருக்கும்.
சாப்பிடுங்க' என்று நீட்டும் மாணவரிடமிருந்து சிறிது எடுத்துச்சாப்பிடாமல் இருந்ததேயில்லை.
எனக்குப்பிடிக்காத காய்கறியாக இருந்தால், இது பிடிக்காது என சிரித்தபடி மறுப்பேன்.
எனக்குக்கொடுத்தபின்பே சாப்பிடும் மாணவர்களும் உண்டு.
சிறிதளவு உணவு-சிரித்தமுகம்
அன்பைப்பரிமாற இதுவும் ஒரு வழி.
சிலர்,
மாணவர் ஏதேனும் நீட்டியவுடன் முகம் சுழிப்பார்கள்.
மோப்பக்குழையும் அனிச்சம்.......என்று சொல்லித்தருவதை விட செயலில் காட்டுவதே அழகு.
ஒருவகையில் மாணவரும் விருந்தினரே.

இளிவரல் - அருவருப்பு, ஆசிரியர் விலக்கவேண்டிய சுவைகளுள் முக்கியமானது.

No comments:

Post a Comment