Saturday 1 November 2014

கனவுகளை விதைக்கும் மந்திரவாதி



பகலில் நெடுநேரம் தூங்கினேன்.
இரவு முழுதும் பல்வேறு சிந்தனைகள்.
இணையத்திலும் பல்வேறு விவாதங்கள்.
அன்றாடம் எத்தனையோ சாமானியர்கள் எவ்வளவோ துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
ஊடகங்கள், VIP என்று வெளிச்சம் பாய்ச்சுகின்றன.
புலியால் கொல்லப்பட்டவன் சாமானியன் என்பதால் மனநலம் இல்லாதவனாகி, குடும்பமே குழப்பத்தில் இருக்கிறது.
அடிப்படையான மனிதம் காணாமல் போயிருக்கிறது.
அங்கொன்றும் இங்கொன்றும் நம்பிக்கை தரும் மனிதர்கள் இயங்கினாலும் பேராசை,சுயநலமே அதிகம்.
கடினமாய் உழைத்து கனவுகளில் வாழப்பழகிவிட்டது சமூகம்.
வளர்ந்துவிட்டவர்களை ஏதும் செய்துவிட முடியாது.
'மயானத்தத்துவம்' பேசி மறப்பவர்கள்.
எதிர்காலம் மட்டுமே ஒரே நம்பிக்கை.
குழந்தைகள், வாழும் சூழல் எவ்வளவு வேறுபட்டதாக இருந்தாலும்
பள்ளிச்சூழல் சரியாக அமைந்துவிட்டால் மனங்களில் மாற்றங்களை விதைத்துவிடலாம் என நம்புகிறேன்.
வகுப்பறைகள் மாற்றங்களை காண வேண்டும்.
கதைகள்,செயல்பாடுகள், உரையாடல்கள் போன்று பகிர்தல் அதிகமுள்ள சிந்தனைக்களமாக வகுப்பறைகள் மாறவேண்டும்.
கனவுகளை விதைக்கும் மந்திரவாதி ஆசிரியரே.

No comments:

Post a Comment