Tuesday 6 May 2014

"நான்" --"நாங்கள்"

பெரும்பாலானோருக்கு இந்த அனுபவம் இருக்கும்.

நாம் கட்டும் கட்டிடத்தில் நாள் முழுவதும் உழைக்கும் கட்டிடத்தொழிலாளி, மதிய வேளையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தால்,"சம்பளம் வாங்கிக்கொண்டு எப்படித்தூங்குகிறார்கள்?" என்று ஒப்பாரி வைக்கிறோம்.
"என்னத்தக் கிழிக்குரானுக ,இவ்வளவு சம்பளம்...!" எனப் பொது மக்கள் பேசும்போது எவ்வளவு கோபப்படுகிறோம்?
உடல் உழைப்பு...அறிவு உழைப்பு என வார்த்தைவிளையாடித்தப்பித்துக் கொள்கிறோம்.நமக்குக் கொடுப்பவர்கள்,நம்மிடம் நுகர்பவர்கள் கேள்வி கேட்பதில்லை.
முதல் வகுப்பில் சேரும்போது இருந்தது போலவே பத்தாம் வகுப்பில் எழுதவும் வாசிக்கவும் தெரியாமல் மாணவர்கள் இருப்பதற்கு யார் காரணம்? 10 ஆண்டுகள் படம் நடத்திய(?) ஆசிரியர்கள் தானே!
அதற்கு இணையான ஊதிய விகிதம்...எனப்பலவாறு கோரிக்கைகள் எழுப்புகிறோமே.....தனியாருக்கு நிகரான தரத்தில் கல்வி என முயன்றிருக்கிறோமா?
ஆசிரியர்களுக்கு எதிரான பொதுக் கேள்விகள் எழும்போது "நான் அப்படியில்லை" என ஆங்காங்கே சிலர் எழுகின்றனர்.
"நான்" --"நாங்கள்" ஆகும்போது கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படும்.

No comments:

Post a Comment