Monday 3 November 2014

ஆசிரியர் நவராத்திரி - 8 - உவகை.


மகிழ்ச்சி.
அனைவரும் விரும்பும் சுவை.
பாராட்டுக்கள் மகிழ்ச்சியைத்தரும்.
ஆசிரியர்களாகிய நாம் பாராட்டப்பட்டிருக்கிறோமா?
நமது புதிய முயற்சிகளுக்காக,
வெளிப்படையாக நாம் பாராட்டப்படுவதுபோல் தோன்றினாலும் அதிகமாக விமர்சிக்கப்படுகிறோம்.
குறை சொல்லப்படுகிறோம்.
மகிழ்ச்சியில் முழுமையாகப்பங்கு பெறுபவர்களும் பகிர்ந்து கொள்பவர்களும் குறைவு.
குழந்தைகள்,
பாராட்டைப்பெரிதும் விரும்புகின்றனர்.
முதலிடம் பெறுபவர்களை மட்டுமல்ல,
வகுப்பறையில் ஒவ்வொரு குழந்தையையும் பாராட்ட வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் பாராட்டிப்பாருங்கள்.
வகுப்பறை மாற்றங்களின் விளைநிலமாகும்.

No comments:

Post a Comment