Friday 31 October 2014

காமெடி பீசு.


6ஆம் வகுப்பில் வினா விடைகள் எழுதிக்கொண்டிருந்தேன்.
அவ்வப்போது மாணவர்கள் அதிகமாகச்சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தனர். வகுப்பிற்கு வெளியே மராமத்துப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அங்கிருந்து ஒரு பெரிய கட்டையை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தேன். கண்களை நன்கு விழித்தபடி குரலை உயர்த்தி,
" ஏய், சத்தம் போடுறவன,ஒரே அடி" என்றேன்.
திடுக்கிட்டு வகுப்பறை அமைதியாக, முன்னால் இருந்த ஒரு சிறுவன்
சிரித்துக்கொண்டே சொன்னான்,
"காமெடி பீசு".
அனைவரும் சிரித்தனர்.நானும்.
நண்பரிடம் சொன்னேன்.
இதை வளர விடக்கூடாது என்றார்.
இதைத்தான் வளர்க்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

No comments:

Post a Comment