Friday 31 October 2014

நீல நிறம்..வானுக்கும் கடலுக்கும்!


சில ஆண்டுகளுக்கு முன்.
CANVAS- ஓவியப்பயிற்சி வகுப்பில் நிலக்காட்சி வரைவது எப்படி? என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தேன்.
ஒரு நிலக்காட்சியை வரைந்து வண்ணம் தீட்டச்சொல்லிக்கொண்டிருந்தேன்.
" வானம்!.... நீல நிறம் தீட்டுங்கள்"
நான் செய்தபின், சுற்றிவந்தேன்.
ஒரு சிறுவன்,6 வயது- அவன் தந்தை நீல நிறம் தீட்டு- என்கிறார்.
மாட்டேன் என்கிறான்.
நான் சிரித்தபடி இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
தந்தை கெஞ்சுகிறார்,
"அங்கபாரு, சார் எப்புடி வரைஞ்சிருக்காரு,
நல்ல பையன்ல, நீயும் அதே மாதிரி செய்! "
சிறுவன் பொறுமையிழந்து ஜன்னலுக்கு வெளியே கையைக்காட்டினான்,
" அங்க பாருப்பா, வானம் புளூ கலராவா இருக்கு?"
காலை 11 மணி. அன்று வானம் வெளுத்திருந்தது, நானும்.


இந்த நிகழ்விற்குப்பின் எங்களின் ஓவியம் கற்பித்தல் முறைகள் பெரிதும் மாறின.

No comments:

Post a Comment