Friday 31 October 2014

நவீன ஓவியங்கள்,வெற்றுக்கிறுக்கல்களா?



தற்கால ஓவியங்களில் குறிப்பாக நவீன ஓவியங்களைக்காண்பவர்கள் பெரும்பாலும் கேட்கும் ஒரே கேள்வி,
இதில் என்ன வரைந்திருக்கிறார்கள்?
உள்ளதை உள்ளபடி வரைவதையே ஓவியம் என்று வியந்து பாராட்டுகிறார்கள்.
அப்படியே வரைந்திருக்கிறார்! என வியக்கிறார்கள்.
வரைய விரும்புபவர்களும் கற்றுத்தருபவர்களும் கலைக்கல்லூரிகளும் மரபான வழிமுறைகள் என்று தொடங்கி இருப்பதை நகலெடுப்பதை செய்துகொண்டே இருக்கின்றனர்.
இங்கேதான் கலையின் பன்முகத்தன்மை சிதைந்துவிடுவதாக எண்ணுகிறேன்.

உள்ளதை உள்ளபடியே வரைந்து பழகியபின் இயல்பாகவே உருவங்கள் சிதைந்து அருவமாக மாறத்தொடங்கும்,
கலைஞன் தனது தொடர்ந்த பயணத்திலேயே மரபான அழகியலை மாற்றுவான் என்றெல்லாம் பேசித்திரிந்த காலமும் உண்டு.
இப்போது யோசிக்கிறேன்.
வெண்பா எழுதியபின்தான் நவீன கவிதை எழுதவேண்டுமென ஒரு கவிஞனை சொல்லியதுண்டா?
பரதம் பழகியபின்தான் சல்சா ஆடவேண்டுமா?
கலை செம்மையாகுமுன் ஆதிமனிதனிடம் இருந்த துடிப்பான வடிவங்களில் இருந்து தொடங்கிய கலையின் பயணம் எங்கே ?
கலைஞன் இன்றைய மண்ணில் மரமாய் நிற்கவேண்டியவன்.
எண்ணங்களின் வீச்சுக்கேற்ப பாதாளத்தில் வேர்களும் ஆகாயத்தில் கிளைகளும் பரப்பிய மாபெரும் மரமாய்.

No comments:

Post a Comment