Friday 31 October 2014

கூத்து.


எட்டாண்டுகளுக்கு முன்.
பள்ளி ஆண்டுவிழா.
ஆசிரியர்களையும் ஒரு கலை நிகழ்ச்சி கொடுக்கச்செய்யலாமென
அப்போதைய தலைமையாசிரியர் எண்ணினார்.
நாங்களும் ஒத்துக்கொண்டோம். உதவித்தலைமையாசிரியரின் விருப்பப்படி நவராத்திரி படத்திலிருந்து சிவாஜி-சாவித்திரி நடித்த நாடகப்பாடலை அப்படியே செய்யலாம் என முடிவு.
நான், சிவாஜி.
சாவித்திரிக்கு என்ன செய்வது?
;கலை நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் கணித ஆசிரியர் பாலாஜி ஒரு யோசனை சொன்னார். அதன்படி எங்கள் பள்ளியில் நிர்வாகப்பணியிடத்தில் பணியாற்றிவந்த ஆசிரியையிடம் பேசி நடிக்க வைப்பது.
"கூத்து என்பதால் பெரிதும் ஆடவேண்டியதில்லை.
பாவனைகள் செய்தால் போதும்.
ஆண் பாத்திரம் அருகிலேயே வரமாட்டார். படக்காட்சியைப்பார்த்தபின் முடிவு சொல்லுங்கள்."
என்று பல்வேறு காரணங்கள் சொல்லி இறுதியில் அவரும் சம்மதித்துவிட்டார்.
நானும் மற்றவர்களும் பள்ளியிலும்,
அவர் வீட்டிலும் தனித்தனியே ஒத்திகை.
நிகழ்ச்சிக்கு வந்தால் போதும்.
இச்செய்தி, தீக்குச்சியின் தீ போல அதனையே எரிக்க,
பாவம் அந்த ஆசிரியை, பதறியடித்து விலகிக்கொண்டார்.
என்ன செய்வது? இரகசியமாக ஒரு முடிவெடுத்தோம்.
வேறு ஆசிரியை ஒத்துக்கொண்டார் என்று செய்தியைப்பரப்பிவிட்டோம்.
தீக்குச்சி, ஒத்திகை நேரங்களில் சுற்றிச்சுற்றி வந்தது.
நிகழ்ச்சி நாள்.
கலை நிகழ்சிகளை வழக்கம்போல் நண்பர் பாலா .தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார்.
எங்களின் கூத்து இறுதி நிகழ்ச்சி.
சாவித்திரி தவிர அனைவரும் தயார்.
தக்கதருணத்தில் பாலா மீசையை மழிக்க, ரமணனின் கைவண்ணத்தில் சாவித்திரி தயார்.
நிகழ்ச்சி அறிவிப்பு வந்தவுடன் சிவாஜி கதாபாத்திரம் வந்து சென்றபின் அனைவரும் ஆவலுடன் காத்திருக்க சாவித்திரியின் வருகையின்போது பாலாஜியின் ஏற்பாட்டின்படி வாணவேடிக்கைகள்.

திரைப்படத்திலும் நாடக நடிகை வராமல் சாவித்திரி அந்தப்பாத்திரம் ஏற்றுச்சிறப்பாகச்செய்திருப்பார்.
எங்களின் கூத்தும் அப்படியே ஆனது.
எல்லோருக்கும் அந்த ஆசிரியை யாரென்று கண்டுபிடித்து மகிழ்ந்தார்கள்.
பாவம் தீக்குச்சி!
தீக்குச்சியால் நன்மைகள் உண்டு.
அந்த நிகழ்வை இந்த இணைப்பில் காணலாம்.....
https://www.youtube.com/watch?v=y_Q4YJ4T4AI

No comments:

Post a Comment