Friday 31 October 2014

கே.பி.எஸ்.


12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நண்பர்களுடன் சாலையில் சென்றுகொண்டிருந்தேன். ஒலிபெருக்கியில் ஒரு பாடல், கே. பி. சுந்தராம்பாள் பாடியது. அப்படியே நின்றுவிட்டேன். நண்பர்கள் அழைத்தார்கள். பாடலைக்கேட்டபின் வருகிறேன் என்று சொல்லி நின்றுவிட்டேன்.
இதுதான் என் நினைவில் இருக்கும் கே.பி.எஸ். பாடலை ரசித்த முதல் நிகழ்வு.

அதன் பின் எப்போது எங்கு கே.பி.எஸ். பாடல் கேட்டாலும் நின்று ரசித்திருக்கிறேன். பாடலுக்காகவே அவர் நடித்த படங்களைப்பார்த்திருக்கிறேன்.காதுக்குள் நுழைந்ததும் நரம்புகள் வழியே உடலெங்கும் பாயும் மின்சாரம் அவர் குரல்.அது எனக்குள் என்னவெல்லாம் செய்யுமென்று எழுத வார்த்தைகளால் இயலாது.

மகாகவி காளிதாஸ் படத்தில்,
" சென்று வா மகனே, சென்று வா" என்று பாடும் போது இன்று வரை அவர் என்னைப்பார்த்துப்பாடியதாகவே உணர்கிறேன்.

எனது நண்பர்கள் பலர் சூரியன் பண்பலையில் பணியாற்றுகிறார்கள் ,நண்பர் சுதன் பாலா 'சூர்யோதயம்' என்ற நிகழ்ச்சியை காலையில் வழங்கினாலும் கே.பி.எஸ். பாடல்களை அடிக்கடி ஒலிபரப்புகிறார்கள் என்பதற்காகவே காலை வேளையில் சமையலறையில் 'ரேடியோ மிர்ச்சி' கேட்கிறேன்.
கே.பி.எஸ் தனது குரலால் அன்றாடம் எனது ஒவ்வொரு அணுவுக்கும் புத்துயிரூட்டிகொண்டே இருக்கிறார்.
 
தினந்தோறும் ரசித்துக்கொண்டே இருக்கிறேன்.

No comments:

Post a Comment