Friday 31 October 2014

நடிகவேள்


ஊர் ஆயிரம் சொல்லும்.வாழவேண்டிய வயது. நீ, திருமணம் செய்துகொள்.என்று தன் மனைவியை தனது நண்பனிடம் ஒப்படைக்கிறான் மரண வாயிலில் நிற்கும் நோயாளி ஒருவன்.
படம்- இரத்தக்கண்ணீர்
ஆண்டு- 1954
நடிகர்- நடிகவேள் எம்.ஆர். ராதா.
காலையில் தாலிகட்டியவள் வேறொருவனைக்காதலித்திருக்கிறாள் என்பதால் அவனைத்தேடி அவனுடனேயே சேர்த்துவைத்துவிடலாம் என ஒரு நல்லவன் 7 நாட்கள் முயன்று கண்டுபிடித்து இறுதியில் காதலனிடம் ஒப்படைகிறான்.காதலன் காதலியிடம் தாலியை கழற்றிவிட்டு வரச்சொல்ல, அவளோ தடுமாற, அந்த மலையாளக்காதலன் தமிழ்ப்பெண்களின் தாலிக்கயிற்றின் பெருமைகளைப்பட்டியலிட, கயிறுடனே காலமெல்லாம் வாழ்வாள்.
படம்- அந்த 7 நாட்கள்.
ஆண்டு- 1981
இயக்குனர், நடிகர் - கே. பாக்கியராஜ்.
நடிகவேளை நினைக்கும்போதெல்லாம் எனக்கு இந்த இரு படங்களின் இறுதிக்காட்சிகளே நினைவுக்கு வரும்.
பிற்போக்காகப்போய்க்கொண்டே இருக்கிறோம்.

No comments:

Post a Comment