Tuesday 6 May 2014


விந்தைக்கலைஞனின் உருவமில்லாச்சித்திரம்....
 

எழுத்தாளர்களைப்போற்றாத சமூகம் எனப்பலரும் குறைப்பட்டுக்கொள்ளும் தமிழ்ச்சமூகத்தில் ஓவியர்களின் நிலையை எப்படி விவரிக்க முடியும்?
பல நாடுகளில், வாழும் காலத்தில் கவனிக்கப்படாத பல ஓவியர்கள் இன்று ஓவிய உலகில் நாள்தோறும் பேசப்படும் மகா கலைஞர்களாக இறவாப் புகழடைந்திருக்கிறார்கள்.
ஆனால், மூத்த குடியாகிய தமிழ் சமூகத்தில் எப்போதாவது ஓவியர்களைப்பற்றிய புத்தகங்கள் தமிழில் வெளிவருவதுண்டு.

சி.மோகனின் முதல் நாவலாக வெளிவந்து சென்ற சென்னைப்புத்தகக்கண்காட்சியில் பெரிதும் பேசப்பட்ட நாவல்,
விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்.



காலத்தைத்தாண்டிச் சிந்தித்து,தன் கனவுலகில் நாயகனாக வாழ்ந்து,33 வயதில் கனவுலகிற்குப் பெயர்ந்தவர் ,ஓவியர் ராமானுஜம்.
அவரின் வாழ்க்கை பற்றிக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிறப்பாக நாவலை எழுதியுள்ளார் சி.மோகன்.



பதிப்புலகம் நன்கு வளர்ந்துள்ள இன்றைய சூழலில் ஓர் உன்னத ஓவியக்கலைஞனின் வாழ்க்கைச் சித்திரம், அவன் வரைந்த ஒரு ஓவியம் கூட

இல்லாமல் வெளிவருவது,எவ்வளவு பெரிய அவமானம்!
  (அட்டைப்படம் தவிர.அதுவும் ஓவியர் ஆதிமூலம் வரைந்த ராமானுஜத்தின் கோட்டோவியத்துடன் கலந்து இருக்கிறது)

எழுத்தில் விவரிக்கப்பட்ட செய்திகளை எண்ணத்தில் வாங்கி, கனவில் ஓவியமாகப் பார்க்க வாசகர் என்ன, ராமானுஜமா?



ராமானுஜத்தின் சில ஓவியங்கள்,உங்களின் பார்வைக்கு.(இணையத்தில் எடுத்தவை...பதிவேற்றியவர்களுக்கு நன்றி.)

No comments:

Post a Comment