Friday 4 July 2014

வாசி..நேசி...யோசி...!










6,7,8 வகுப்பெடுக்கும் எங்கள் பள்ளித்தமிழாசிரிய நண்பர்கள் சேர்ந்து 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக

வாசி..நேசி...யோசி...! எனும் தலைப்பில் ஒரு கண்காட்சி வைக்கலாமென முடிவுசெய்தோம். தமிழ் எழுத்துக்களையும் மதுரை நகரின் பழைய புகைப்படங்களையும் காட்சியில் வைக்காலாமென முடிவு செய்தோம். பள்ளிச்செயலர் ஆர்வமுடன் அனுமதிக்க அனைவரின் ஒப்புதலுடன் ஏற்பாடுகள் தொடங்கின.
மூன்று நாட்கள் ஆர்வம் நிறைந்த மாணவர்கள்,ஆசிரிய நண்பர்களின் உதவியுடன் கண்காட்சி 27 ஆம் தேதி நடைபெற்றது.
ஒவ்வொரு வகுப்பாக மாணவர்கள் வந்து கண்காட்சியைப்பார்த்தபின் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. எழுத்துக்கள் கற்பதற்கேற்ற விளையாட்டுகள் நடத்தப்பெற்றன.


பிற்பகலில் பள்ளிச்செயாளர் தலைமையில் தலைமையாசிரியர் வரவேற்க, டி.வி.எஸ். பள்ளித்தமிழாசிரியர் திரு. கதிரவன் பல்வேறு பாடல்களுடன் மாணவர்களுடன் உரையாடினார்.



பெற்றோர்கள்,பத்திரிக்கையாளர்கள், முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர். சில ஆசிரியர்கள் லேசாக எட்டிப்பார்த்தனர்.
ஏறத்தாழ 300 மாணவர்களின் மனது கொண்டாட்டங்களால் மகிழ்ந்தது

No comments:

Post a Comment