Saturday 23 June 2012

பெரியார் - யார்?

பெரியாரும்  பாலாஜி சக்திவேலும் 

http://profile.ak.fbcdn.net/hprofile-ak-ash2/203620_162783540454645_6938247_n.jpg 
               பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் , பத்தாம் வகுப்புப் பாடம்.
நடத்தத் தொடங்கும் முன் மாணவர்களிடம் கேட்டேன்,
பெரியார் யார்?
                         பேச்சாளர் 
                         எழுத்தாளர் 
                         எல்லாத்துக்கும் காசு வாங்குவார்.....?
                         சுதந்திரப் போராட்ட வீரர் 
எனச் சில மாணவர்கள் சொல்ல மற்றவர்கள் வழக்கம் போல்  அமைதியாய்.
அதிர்ச்சியாக இருந்தாலும் யோசித்தேன். 

சமூக விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள் மறக்கப்படுவது ஏன் ?
யார் காரணம்? மாணவர்களைக் குறை சொல்லுவது நியாயமில்லை.

பள்ளிப்பாடங்கள் வெறும் மனப்பாடங்களாக மாறி நீண்ட காலமாகிவிட்டது.

நண்பர் சுரேஷை சந்தித்த போது கூறினார்,
 சமீபத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேலை சந்தித்தேன்.இவர் ஆசிரியர் என்று என் நண்பர் அறிமுகம் செய்து வைத்தார்.உடனே அவர் என் கைகளைப்பிடித்துக்  கொண்டு  கூறினார்,"நண்பரே,உங்கட்ட  தான் எதிர்காலமே இருக்கு.நீங்க எது சொன்னாலும் பசங்க நம்புவானுங்க.
நல்லா சொல்லிக்கொடுங்க."என்று சொன்ன போது நான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்.
இதைக்கேட்டவுடன் எனக்கும் பெருமிதமாக இருந்தது.
ஒரு ஆசிரியனாக தினம் தினம் கற்றுக்கொண்டேயிருக்கிறேன்.





No comments:

Post a Comment