Wednesday 4 March 2015

28.11.2014
ஒன்பதாம் வகுப்பில் அந்த மாணவனைப்பார்த்தேன்.
ஏன் நீ ஆடல?
கட்டு அவுந்துருச்சு.
நல்லா கட்டிருக்கலாம்ல.
ஆட ஆரம்பிக்கும்போது....
ஆட்டக்காரனுக்கு அதுகூடத்தெரியல.!
ஒருவாரம் ஹிந்திப்பாட்டு கூட்டத்தோட ஆடுறேன் என்று வகுப்பை கட்டடிச்சாச்சு.
வேணாம்னு சொன்னப்போ பாவம்னு நான் ஆடச்சொன்னேன்.
வாடகை யார் தந்தாங்கன்னு விசாரணை வேறு.
உன்னை ஆரம்பத்திலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொருமுறையும் திருந்திவிடுவாய் என்று பல வாய்ப்புகள் தந்தாகிவிட்டது.
திருந்தவே இல்லை.
ஒரு ஆளுக்கு 50 ரூபாய் வாடகை பேசி கட்டைக்கால் எடுத்திருக்கிறேன்.
பள்ளியில் கொடுத்தது கொஞ்சம்.
உன் அலட்சியப்போக்கால் நீ எத்தனை வாய்ப்புகளை தவறவிட்டிருக்கிறாய் தெரியுமா?
வாசிக்கவும் எழுதவும் தந்த அனைத்து விதமான பயிற்சிகளையும் பட்டியலிட்டேன்.
உன் தந்தையும் அவ்வப்போது இதுவேற,
"சார்,என் பையன் சொல்லிட்டான் அடுத்த வருஷம் வேற ஸ்கூல்ல சேர்த்து விட்டா நல்லா படிச்சிருவானாம்."
எப்படி இதெல்லாம்.
தம்பி, எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்கோம்னா ஒரே காரணம்தான்.
வகுப்புல சொல்ற செய்திகள் ஒருநாளாவது அறிவுக்கு எட்டி சிந்திக்க ஆரம்பிப்ப என்கிற நம்பிக்கை.
பார்ப்போம்.
ஆனா,ஆண்டுவிழாவில் நீ ஆடாமல் போனது எனக்கு மிகப்பெரிய அவமானம்.
வழக்கம்போல் அமைதியாக இருந்தான்.
பார்க்கலாம்.
இளம் வயதில் நாட்டிற்காக தூக்குக்கயிற்றில் உயிர்த்தியாகம் செய்த மாவீரனின் பெயரை வைத்திருக்கிறான் என்பதற்காகவே சேட்டைகளை எல்லாம் பொறுத்துக்கொள்கிறேன் என்பது அவனுக்கும் தெரியும்.

No comments:

Post a Comment