Wednesday 4 March 2015

11.11.2014
நேற்று 10, 12 ஆம் வகுப்புகளுக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு. முதலிரண்டு பாடவேளைகள் தேர்வறைக்கண்காணிப்பு பணி. முடிந்தபின் 9 ஆம் வகுப்பிற்குச்சென்றேன்.
ஏதேனும் ஒரு பத்தியை வாசித்து மாணவர்களைக்கேட்கச்செய்து கேட்டதை எழுதச்சொல்லலாம் என எண்ணினேன்.
வகுப்பில், 15 மாணவர்கள் வரவில்லை. எனக்கோ ஆச்சரியமாக இருந்தது! மாணவர்களிடம் கேட்டேன்.
ஒரேடியா இங்லீஷ், அறிவியல்,சமூகறிவியல் சார் எல்லாரும் டெஸ்ட் சொல்லிட்டாங்க.....
எப்படியும் நாளைக்கு வந்துதானே ஆகணும்!
அதெல்லாம் சமாளிச்சுரலாம்......
வாசிக்கவே தெரியாத இரு மாணவர்களும்
வந்திருந்தனர்.
நீங்க படிச்சாச்சா?
எப்பவும்போல எழுதிருவோம்!

பள்ளியில் நடத்தும் தேர்வுகள் தவிர, வகுப்பறைக்குள் தேர்வுகள் நடத்துவது எனக்கும் பிடிக்காது.
பத்தாம் வகுப்பிலும் எழுதிக்காட்ட விரும்பும் மாணவர்கள் எழுதலாம் என்று சொல்லிவிடுவேன்.

No comments:

Post a Comment