Wednesday 4 March 2015

08.11.2014
திரைப்பட ரசனைக்குழு உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றிய பின் மாணவர்களின் ரசனை எந்த அளவு இருக்கிறது? என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது.
ஒன்பதாம் வகுப்பில் உரையாடலைத்தொடங்கினேன்.
இப்போ நாம திரைப்படம் குறித்து பேசப்போறோம்.
மாணவர்கள் ஆர்வமானார்கள்.
ஒரு படத்தை விமர்சனம் செய்யப்போறோம்.
முக்கிய நிபந்தனை,
நடிகர்களின் ரசிகர் என்ற முறையில் தாக்குதல் கூடாது.
படத்தில் நீ பார்த்த நிறைகளை முதலில் சொல்லலாம்.
என்று சொல்லி படத்தின் பெயரை கரும்பலகையில் எழுதினேன்.
கத்தி.
படம் சூப்பர்.
கூட்டமா கத்தக்கூடாது. ஒருத்தர் எழுந்து சொல். பிறகு அடுத்தவர்.
விஜய் நடிப்பு, கதாநாயகி அழகு....
நாம படத்தோட கதை, மற்ற தொழில் நுட்ப செய்திகளை கவனிப்போம்.
கதாநாயகன் யாருக்காக போராடுறான்?
விவசாயிகள்.
வயதானவர்கள்.
விவசாய நிலம்.
திடீரென எனக்கு ஒரு கேள்வி தோன்றியது.
வில்லன் என்ன வேலை செய்கிறான்?
கம்பெனி.
இல்ல,பேக்டரி கட்டுறான்.
என்ன ஃபாக்டரி?
தொழிற்சாலை.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒருவர்கூட கோலா நிறுவனம் என்று சொல்லவில்லை.
பாடல்,நடனம் என்று நிறைகள் எழ, குறைகளைக்கேட்டேன்.

படம் முடியும்போது ஒரு விஜய் தப்பித்து வருகிறார். எப்படி என்று காட்டுப்போது காசை சுண்டுகிறார்,
ஆனா,அந்த சண்டைய காட்டல!
பெரும்பாலும் சண்டை,நடனம் போதவில்ல என்பதே குறைகளாக இருந்தது.
கதைத்திருட்டு குறித்த செய்திகள் யாருக்கும் தெரியவில்லை.
சார், படத்துல ஒரு நல்ல விஷயம் சொல்லவா?
சொல்லு.
நல்லவனால சண்டையெல்லாம் போடா முடியாது. அதுனால கெட்டவன்,அவன ஜெயிலுக்கு அனுப்பிட்டு எல்லாருக்காகவும் போராடுறான்.
அதிர்ந்துபோனேன்.
இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் தமிழ் சினிமா மசாலாவை விட்டு மாறாது என்று எண்ணினேன்.
மனம் ஏன் கதாநாயகனை விரும்புகிறது?
தமிழ் சினிமாவின் சுருக்கமான வரலாறு, சிறந்த இயக்குனர்கள்,போன்ற சில செய்திகளை சொன்னேன்.
நண்பர்களிடம் இவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ளலாம் என்று உயிரியல் ஆய்வகம் சென்றேன்.
12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிக்கொண்டிருந்தனர்.
நண்பரிடம் சுருக்கமாக சித்தியை சொல்லிவிட்டு, அந்த மாணவர்களிடம் ஒரு கேள்வி மட்டும் கேட்கலாமே! என்று கேட்டேன்.
தம்பிகளா, கத்தி படத்துல வில்லன் என்ன வேலை செய்யறார்?
சிறிது நேர யோசனைக்குப்பின்,
பாக்டரி.
கொக்கோ கோலா கம்பெனி.
இல்ல சார், MNC கம்பெனி.
போதும். எழுதுங்க.

No comments:

Post a Comment