Saturday 7 March 2015

03.12.2014
பயிற்சியாசிரியைகளுக்கு பயிற்சிக்காலம் நிறைவடையப்போகின்றது.
முக்கிய சடங்காக அடைவுத்தேர்வு.
எல்லா பயிற்சியாசிரியைகளும் தேர்வுக்கான வினாக்களுடன் விடைகளையும் முன்னரே எழுதிப்போட்டுவிட்டு ஓரிரு நாட்கள் கழித்து தேர்வு வைக்கின்றனர்.
ஒன்பதாம் வகுப்பில், கேள்வியை மட்டும் சொல்லுங்கள், பதிலை மாணவர்களே தேடிப்படிக்கட்டும். என்று சொன்னேன்.
பயிற்சியாசிரியையும் ஒப்புக்கொண்டார். அவரின் முக்கிய பாடமான அறிவியலுக்கும் அப்படியே செய்யப்போவதாகவும் கூறினார்.
நேற்று அறிவியல் தேர்வு.
ஒரு சிலரைத்தவிர யாருமே சரியாக எழுதவில்லை.
அனைத்து கேள்விகளுக்கும் ஒருவர்கூட பதிலளிக்கவில்லை.

மாணவர்கள் எழுதுவதை பெரும் சுமையாக எண்ணுகின்றனர்.
பார்த்து எழுதுவதை தவறாக நினைப்பதில்லை.
இன்று கேள்விகளுடன் பதில்களும் தரப்பட்டு அந்தத்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
நாளை தமிழ்தேர்வு. விடைகளை அவர்களே தேடிப்படிக்கவேண்டும்.
என்று சொல்லியிருக்கிறேன்.

No comments:

Post a Comment