Sunday 10 August 2014


6 அடிக்கு 6 அடி. அரச அளவுக்கட்டில்.
1 அடி உயர மெத்து மெத்தென்ற மெத்தை.
எவ்வளவு இடமிருந்தாலும் எத்தி எத்தியே கட்டிலின் விளிம்பில்
இப்பவோ அப்பவோ என்று விழுந்து விடாமல் சாகசமாக என்னை உறங்கப்பழக்கியிருக்கும் பிள்ளைகள்.
ஆயிரம் சதுர அடிக்கு மேல் வீடு.
ஆளுக்கொரு அறை .
விதவிதமான வடிவமைப்புகள்.
எல்லாமே,எல்லாமே,
இங்கிருந்துதான் தொடங்கின.
நம் மூதாதை தன் குடும்பத்தைக்குறுக்கி அடைத்துக்கொண்டு
என்னவெல்லாம் எண்ணியிருப்பான்?
உள்ளே உட்கார்ந்திருந்த மணித்துளிகளில்
பெருமிதத்தில் பூத்தன விழித்துளிகள்.

No comments:

Post a Comment