Saturday 21 June 2014

பிறந்தநாளைப்பெருமிதமாகக்கொண்டாடுவதில்லை,
என்றாலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
42 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
ஓவ்வொரு நொடியுமே பிறந்து வாழ்ந்து கடந்துகொண்டிருந்தாலும் ஒவ்வொரு ஆண்டிலும் இந்தநாள் பிறப்பிற்கும் இறப்பிற்குமிடையே ஓர் மேடை அமைத்துத்தருகிறது. சற்றே இளைப்பாறி,எண்ணங்களை அசைபோட்டுச்செல்ல.
11 வயதில் விடுதி,18 வதில் வீதி- வாழ்க்கை நிறைய பாடங்களைத்தந்திருக்கிறது.
மரக்கிளை வாழும் இலைபோல இருந்து செல்லவே விழைகிறேன்.
இயல்பாக ஒவ்வொரு நொடியும் வாழ்ந்து கடக்கவேண்டும். இறுதியில் தென்றலில் வீழும் சருகாய்.
வாழ்ந்த மண்ணுக்கும் மரத்திற்கும் உரமாகத்தேவை சில துளிகள், விண் நீர் அல்லது விழி நீர்.

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

No comments:

Post a Comment