Saturday 31 May 2014

ஆசிரியர்கள் கூட்டம்

இன்று காலை ஆசிரியர்கள் கூட்டம். அதீத உற்சாகத்துடன் சென்றேன். சிலர் வரவேயில்லை. தலைமையாசிரியர், கூட்டம் தொடங்கியபோது திட்ட ஆரம்பித்தவர் முடியும்வரை திட்டிக்கொண்டே இருந்தார்.
பத்தாம் வகுப்பு முடிவுகளைப்பற்றியதாகவே அவரின் பேச்சுக்கள் இருந்தது.தமிழில் கூட மதிப்பெண் எடுக்கவைக்க முடியவில்லையே? சம்பளம் மட்டும் வாங்குகிறோம்?
என்னென்னவோ பேசினார்.வழக்கம் போல பொதுவாகவே திட்டிக்கொண்டிருந்தார்.
நானும் வேலைக்கு வந்த 18 ஆண்டுகளாகவே கவனித்துக்கொண்டிருக்கிறேன்,

ஆசிரியர்கள் கூட்டம் என்றாலே தலைமையாசிரியர் மட்டுமே பேசுவார்.மற்றவர்கள் அமைதியாக அமர்ந்திருப்பர்.சிலர் தலையாட்டுவார்கள்.
ஏதோ இரங்கல் கூட்டம் போலவே இருக்கும். யாராவது எழுந்து கேள்வி கேட்டுவிட்டால் அவ்வளவுதான். நானும் நண்பர்களிடம் கேட்பதுண்டு. உனக்கு ஏன் வேண்டாத வேலை? என்பார்கள்.
ஆனால், ஆசிரியர் அறையில் பேச்சுக்கள் பொறி பறக்கும்.
 ஒரு பிரச்சினை குறித்து யாருமே விவாதிக்க விரும்புவதே இல்லை. பொதுவாகச்சத்தம் போட்டால் போதும்.
ஏன்,ஒவ்வொருவராக காரணங்கள் குறித்து ஆராயக்கூடாது?
அதிகாரிகள்,தலைமையாசிரியர்களிடம் கத்துகிறார்கள்.
தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களிடம் கத்துகிறார்கள்.
ஆண்டுத்தொடக்கமே அமர்க்களம்.

No comments:

Post a Comment