Tuesday 6 May 2014

பொதுத்தேர்வு

1௦ ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.

அறைக்கண்காணிப்பாளர் பணி. தமிழ்த்தேர்வுக்குச் சென்றிருந்தேன். ஓர் மாநகராட்சிப்பள்ளியைச் சாந்த எட்டு மாணவர்களில் ஒருவர் வரவில்லை. மற்றவர்களிடம் விசாரித்தேன்."நீண்ட நாட்களாகப்பள்ளிக்கு வரவில்லை" என்றனர். நேற்று அந்த அறையைக்கடக்கும்போது பார்த்தேன்.எட்டு மாணவர்களும் வந்திருந்தனர்.
புதிதாக வந்திருந்த மாணவனிடம் கேட்டேன்,
"ஏன், முந்தைய தேர்வுகளை எழுதவில்லை?"
"நான் பாசாக மாட்டேன்னு எங்க ஸ்கூல் சார் எழுத வேணாம்னு சொல்லிட்டாரு"
"ஏம்பா, எழுதி ஒருவேளை நீ பாஸாயிட்டா?"
"இல்ல, ஒரு தடவைகூட நான் பாசாகல"
" அதனால என்ன, எப்படின்னாலும் அடுத்தமுறை எழுதப்போற, இப்பவும் எழுதிப் பாத்திருக்கலாம்ல!"
"ஹால் டிக்கெட் தரமாட்டேன்னு சார் சொல்லிட்டாரு,"
எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
அந்த அறையிலிருந்த ஆசிரியை கூறினார்," சார், எட்டு பேர்தான் இருக்காங்க. ஒருத்தன் பெயிலாயிட்டாலும் பர்சென்டேஜ் குறைஞ்சிடும், அப்புறம் எல்லாரிடமும் பேச்சு வாங்கணும், பையன் ஆப்சென்ட் ஆனா ஒண்ணுமில்ல,"
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
என்ன மாதிரியான பணி இது?
ஒரு பள்ளியை, தேர்ச்சி சதவீதத்தை வைத்து எடை போடுவதால் எவ்வளவு இழப்புகள்?
சிறார்களின் வாழ்க்கையோடு இன்னும் எத்தனைகாலம்தான் விளையாடப் போகிறோம்?
எப்போது விடியும்?

No comments:

Post a Comment