Tuesday 6 May 2014

"பாரதி....கஞ்சாக் குடிக்கி" 
 

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்த அறிஞர்கள் பற்றிப்பேச ஓர் சமூக சேவை நிறுவனத்தில் அழைத்திருந்தனர்.
பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர் மற்றும் குழந்தைத் தொழிலாளர் என 50பேர் கொண்ட சிறு கூட்டம்.
தமிழறிஞர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் சுருக்கமாகச் சொல்லிக்கொண்டே வந்தேன்.
பாரதி,என்று ஆரம்பித்தவுடன்,.
"கஞ்சாக் குடிக்கி" என்றான் ஒரு பையன்.
திடுக்கிட்டாலும், சிரித்தபடியே கூறினேன்.
"தம்பி, நீ சொல்லியது முற்றிலும் சரியல்ல,தவறு.
பாரதி, கஞ்சாவில் தொடங்கியிருக்கலாம்,அபின் அதிகம் சாப்பிட்டவன்.ஏன் தெரியுமா?
குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்து, வருந்தியவர் தீய பழக்கங்களைக் கற்றுக்கொண்டார்.நல்லதோ,தீயதோ பழகியவற்றை மறப்பது கடினம்.
தீய பழக்கமே அவரின் உயிரைச் சீக்கிரத்தில் பறித்துக்கொண்டது.

இல்லையெனில் இன்னும் நிறைய அவரிடமிருந்து பெற்றிருப்போம்."
சரியா?

No comments:

Post a Comment