Tuesday 14 August 2012

சண்டை செய்தாலும் நம்மில் சகோதரர்!


டுத்தடுத்து இரு நாட்கள்.சுதந்திர தின கொண்டாட்டங்கள்.வெளியேறிவிட்டான் வெள்ளையன்.
நம் நாடு நம் கைகளில்.
அனைத்து வித அடிமைத்தளைகள்,ஊழல்கள் எல்லாமிருந்தும்
நாம் முன்னேறியிருக்கிறோம்.
 
ஆனால்,இந்த நாட்கள் எல்லைக்கோட்டின் அருகிலும் தள்ளியும் வாழப் பிரிந்த இலட்சக் கணக்கான
மக்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்குமா?
நம் எல்லோரின் மனதிலும் எதிரி நாடு பாகிஸ்தான்.
அங்கு நாம்.
ஒரு குடும்பத்தின் சொத்துத் தகராறு தானே பிரிவினை.
தம்  உடன்பிறந்த  சகோதரனுக்காக விட்டுக்கொடுப்பவர் எத்தனை பேர்?
நாட்டுப்பிரிவினையின்  போது பிரிந்த
குடும்பங்கள்,சிதைந்த உறவுகள்  எத்தனை, எத்தனை?
 
போர் ஏதுமின்றி லட்சக்கணக்கானோர்  கொடூரமாகக்  கொல்லப்பட்ட உலக நிகழ்வு இந்திய பாகிஸ்தான் பிரிவினை.

இன்றைய மகிழ்ச்சியுடன் உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைப்போம்.
நம் பிள்ளைகளுக்காவது நாட்டுப் பிரிவினையின் அவல நினைவுகளை
பாரபட்சமின்றி எடுத்துக் கூறி சகிப்புத்தன்மை வளர்ப்போம்.

சண்டை செய்தாலும் நம்மில் சகோதரர்!

No comments:

Post a Comment