Tuesday 17 July 2012

குவஹாத்தி மற்றும் பில்லா


        குவஹத்தியில் நண்பர்களுடன் பாருக்கு சென்ற 11 ஆம் வகுப்பு மாணவி
இருபதுக்கும் மேற்பட்டவர்களால் நெரிசல் மிகுந்த சாலையில் பாலியல்  வன்முறைக்கு ஆளான படக்காட்சி நம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
      போதை எத்தகைய செயல்களை தூண்டுகிறது என்று எண்ணும் போது
எதிகாலத்தைப்பற்றிய கவலை அதிகரிக்கிறது.
    மிகக்குறைவான நபர்களையே காவல்துறை கைது செய்திருக்கிறது.
இதற்கெல்லாம் என்ன காரணம்?
பாலியல் பற்றிய சரியான புரிதல்கள் ஆண்களிடையே இல்லாததுதான் என நான் நம்புகிறேன்.
பெண் ஒரு இன்பச்சுரங்கம் என்றே அனைத்து ஊடகங்களிலும் காட்சிப்படுத்தப்படுகிறாள்.
விளம்பரங்கள்,திரைப்படப் பாடல்கள்.வசனங்கள்,கதைகள், எல்லாவற்றிலும் பெண் உடல் இன்பச்சுரங்கமாகவே காட்டப்படுகிறது.
திரைக்கதாநாயகர்கள் தம் நண்பர்களுடன் சேர்ந்து பெண்களைக் கேலியும் கிண்டலும் செய்வது நியாயப்படுத்தப்படுகிறது.
இணையம் எல்லா ரகசிய வாசல்களையும் திறந்து வைத்திருக்கிறது.
நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்க பெற்றோர்கள் ஓடி ஓடிச் சம்பாதிப்பவர்கள் ஆகியுள்ளனர்.
பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது இல்லாததாகியுள்ளது.
இதற்குப் பதிலியாக பிள்ளைகளுக்கு கேட்டதை வாங்கித்தருவது  செல்வச்செழிப்பின் அடையாளமாகவும்
கருதப்படுகிறது.பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளால் மிரட்டப்படுகின்றனர்.
        திரைக் கதாநாயகர்களே பெரும்பாலான இளைஞர்களின் ஆதர்சம்.
பில்லா 2 ஆப் பாகம் பார்த்தேன்.ஒரு கடத்தல்காரனின் கதை.எந்தவிதமான நம்பகத்தன்மையும் இல்லாமல்
படம் முழுவதும் நமது "கடவுள்" பலரையும் கொன்று குவிக்கிறார்.
'நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்ல' என்பது போன்ற நியாயப்படுத்தல் எதுவுமே இல்லாமல்
பணம் சம்பாதிக்கவேண்டி பில்லா-வைரம்,போதைப் பொடிகள்,ஆயுதக் கடத்தல் என்று சகட்டுமேனியாக கடத்தித்தள்ளி இளைஞர்களின் இதயத்தையும்(?) கடத்துகிறார்.
இது போன்ற திரைப்படங்களே பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன.
கவர்ச்சி நடனங்கள்,இரட்டை-அவ்வப்போது நேரிடையாகவும் ஆபாச வசனங்கள்,பாரில் குத்துப் பாடல்,
இப்படியாக தமிழ்-இதற்கெல்லாம் தமிழ் எதற்கு?-மனித வாழ் நெறிகளே இல்லாத படங்களே வெற்றிபெறுகின்றன.
இப்படியான கருத்துப் பட நாயகக் கடவுள்களை வழிபடும் இளைஞர்கள் வேறு என்னதான் செய்வார்கள்?
வேலையில்லாதவர்கள் - வழிப்பறி, திருட்டு.
சம்பாதிப்பவர்கள் - கார்பரேட் சாமியார்கள்
   என்ற வழிகளில் செல்கின்றனர்.
இப்படியே பேசிக்கொண்டிருந்தால்..?
எப்படி சரிசெய்வது?
 சாலைகளெல்லாம் பள்ளியை நோக்கியே செல்கின்றன.

ஆசிரியர்கள்,பெற்றோர் சேர்ந்து மாணவர்களின் மதிப்பெண்கள்
பற்றிமட்டும் பேசாமல் அவர்களை மனிதர்கள் ஆக்கவும் யோசிக்கத் தொடங்க வேண்டும்.
குறை சொல்வதை  விடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்க  வேண்டும்.

1 comment:

  1. சிந்தனையைத் தூண்டும் கட்டுரை

    ReplyDelete